பிரித்தானியாவில் அமைந்துள்ள MARYLEBONE CRICKET CLUB-ன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ளது MARYLEBONE CRICKET CLUB. இதை சுருக்கமாக MCC என அழைப்பார்கள்.



இதன் தலைவராக ஓராண்டுக்கு சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவரின் பதிவிக்காலம் அக்டோபர் 1ஆம் திகதி தொடங்கி ஒரு வருடத்துக்கு நீடிக்கும்.

இதன் மூலம் பிரித்தானிய குடியுரிமை இல்லாத ஒருவர் MCC-க்கு முதல்முறையாக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.