Pokémon GO என்ற Mobile Game - ஆல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டு நியூயோர்க் சென்ரல் பார்க் தினறியது.
அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் Pokémon GO என்ற Mobile game அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஜீ.பி.எஸ்(GBS) மூலம் விளையாடக்கூடிய இந்த Game - யினை, நிஜ உலகத்துடன் கனவுலகத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து விளயாடி வருகின்றனர்.
இந்த Game - இல் கண்முன் தோன்றும் Pokémon- களை பந்துகளை கொண்டு எறிவதன் மூலம் புள்ளிகளை பெற முடியும். மேலும் Pokémon- களை பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டியிருப்பதால் அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மைதானங்கள், பூங்காக்கள் என எங்கு பார்த்தாலும் இந்த Game விளையாடும் மக்கள் கூட்டம் தான்.
இதனால் ஏற்பட்ட பின்விளைவு
நேற்று அமெரிக்காவில் சென்ரல் பார்க்கில் இந்த Game விளையாட கூடிய மக்கள் கூட்டத்தினால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும்,கடந்த யூலை 13-ஆம் திகதி நிலவரப்படி Pokémon GO Game - யினை 1.5 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் கம்பெனியின் தாய் நிறுவனமான நின்டெண்டோவின் பங்கு விலை 50%மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.